ஈரான்: செய்தி
அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை
மேற்கு ஆசியப் பகுதியில் நீண்டகால அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஒரு முக்கியத் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி வெறும் 2 வாரங்களே ஆன நிலையில், அங்கு மீண்டும் மிகக் கடுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல்: சிரிப் துறைமுகத் தாக்குதலுக்கு ஐஆர்ஜிசி பதிலடி; முழு விபரம்
உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தின் முக்கியப் பாதையாகத் திகழும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் கடுமையான ராணுவ மோதல் வெடித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல்: ஹார்முஸ் ஜலசந்தி தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற சர்வதேச வர்த்தகக் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் முக்கிய ராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலின் அதிகாரப்பூர்வ வீடியோ காட்சிகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) சனிக்கிழமையன்று (ஜூன் 27) வெளியிட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: ஐநா சபை மீட்புப் பணிகள் தற்காலிக நிறுத்தம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்பட்ட சில நாட்களிலேயே, உலக அளவில் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் மதத் தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் பிரதமர் மோடிக்கு அதிபர் பெசெஷ்கியான் அழைப்பு எனத் தகவல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் அடக்கச் சடங்குகளில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி: போர் காலத்திற்கு முந்தைய நிலைக்குச் சென்ற பிரெண்ட் குரூட் ஆயில்!
உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த பதற்றங்கள் தணிந்து, எண்ணெய் விலையானது அமெரிக்கா - ஈரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலைக்குக் கீழ் சரிந்துள்ளது.
கமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு
கடந்த பிப்ரவரியில் அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியின் அரசு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளதாக WION செய்தி வெளியிட்டுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து 2026: மெஸ்ஸியின் சாதனையை முறியடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்று சாதனை
அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் ஜூன் 23 அன்று நடைபெற்ற FIFA உலகக்கோப்பை கால்பந்து 2026 லீக் ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராகப் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப்பிற்கு பின்னடைவு: ஈரான் மீதான போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்
ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி மேற்கொள்வதை கட்டுப்படுத்தும் முக்கிய போர் அதிகாரத் தீர்மானம், அந்நாட்டின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானிய எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகள் ஆகஸ்ட் 21 வரை இடைநிறுத்தம்
ஈரானிய எண்ணெய் மீதான தடைகளுக்கு அமெரிக்கா 60 நாள் விலக்கு அளித்துள்ளது.
அமெரிக்கா -ஈரான் இடையே 60 நாட்களில் இறுதி அமைதி ஒப்பந்தம்: சுவிஸ் மாநாட்டில் எட்டப்பட்ட உடன்படிக்கை
மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' கீழ் சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தையின் முதற்கட்ட அமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
டிரம்ப் எச்சரிக்கையால் வெளிநடப்பு செய்த ஈரான் குழு; சுவிஸ் பேச்சுவார்த்தை திடீர் நிறுத்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் பல மாத கால மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை திடீரென தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
"நாங்கதான் மிடில் ஈஸ்ட்டோட கார்டியன் ஏஞ்சல்!" ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு சுங்கம் வசூலிக்க டிரம்ப் மாஸ்டர் பிளான்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான 60 நாட்கள் தற்காலிகப் போர் நிறுத்தக் காலத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு எந்தவித சுங்கக்கட்டணமும் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்: லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைதியை நிலைநாட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது அதிரடி திருப்பமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது.
"கொஞ்சம் அமைதியாக இருங்க, மூளையைப் பயன்படுத்துங்க!" இஸ்ரேலை டிரம்ப் மிரட்டிய ரகசியம் அம்பலம்! லெபனான் போர்நிறுத்தத்தின் பின்னணி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தின் பின்னணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடித் தலையீடு இருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
லெபனானில் இஸ்ரேல் - ஹெஸ்பொல்லா இடையே திடீர் போர்நிறுத்தம்; ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் மிகக் கடுமையான போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்பினருக்கு இடையே லெபனானில் திடீர் போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ளது.
மீண்டும் மூடப்படுகிறதா ஹார்முஸ் ஜலசந்தி?அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்ட 48 மணி நேரத்தில் ஈரான் போட்ட திடீர் முட்டுக்கட்டை! பின்னணி என்ன?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களிலேயே, அங்கு மீண்டும் புதிய சிக்கல் வெடித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் 80 கடல் கண்ணிவெடிகள்: சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்து எப்போது சீராகும்?
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி போக்குவரத்தின் மிக முக்கியமான கடல்சார் நுழைவாயிலாகத் திகழும் ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்பான கப்பல் போக்குவரத்து உடனடியாகத் தொடங்குவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.
ஹிஜாப் அணியாமல் பாடியதற்காக ஈரானியப் பாடகிக்கு 74 கசையடிகள் விதித்த நீதிமன்றம்
ஈரானிய பாடகியும் இசையமைப்பாளருமான பரஸ்தூ அஹ்மதி, நேரலையில் ஒளிபரப்பப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சியின் போது ஹிஜாப் அணியாமல் பாடியதற்காக, கோம் மாகாண நீதிமன்றம் ஒன்றால் 74 கசையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டதால் எண்ணெய் விலைகள் சரிவு
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டதாலும், அமெரிக்க- ஈரான் இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டதாலும், வெள்ளிக்கிழமையன்று எண்ணெய் விலைகளில் சரிவு ஏற்பட்டது.
அமெரிக்கா -ஈரான் ஒப்பந்தத்தின் முதல் வெற்றி: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து குஜராத் வந்தடைந்தது இந்தியாவின் முதல் LNG கப்பல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மூன்றரை மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போரினால் முடக்கப்பட்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, பாதுகாப்பாக கடந்து இந்தியாவின் முதல் LNG கப்பல்-'திஷா' குஜராத்தின் தாகேஜ் துறைமுகத்தை வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்தது.
பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்
லெபனானின் அரசுக்கு சொந்தமான தேசிய செய்தி நிறுவனத்தின்படி, இஸ்ரேலிய படைகள் தெற்கு லெபனான் முழுவதும் இரவு முழுவதும் நடத்திய வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா -ஈரான் பேச்சுவார்த்தை திடீர் ரத்து: சுவிட்சர்லாந்தில் தொடங்கவிருந்த அமைதி மாநாட்டில் முட்டுக்கட்டை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த வாரம் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க 14 அம்ச அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, சுவிட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த உயர்மட்ட ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஈரான் மீதான கடல் முற்றுகையை நீக்க டிரம்ப் உத்தரவு; நிம்மதிப் பெருமூச்சு விடும் உலக நாடுகள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த கடுமையான போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடல்சார் ராணுவ முற்றுகையை அமெரிக்கப் படைகள் அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளன.
அமெரிக்கா - இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்: "இஸ்ரேலின் ஒரே சக்திவாய்ந்த நட்பு நாடு நாங்கள் மட்டும்தான்"
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், நீண்டகால நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தற்பொழுது ஒரு பெரிய ராஜதந்திரப் போராக வெடித்துள்ளது.
ஈரான் அமைதி ஒப்பந்தம்: அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்த ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த வளைகுடா போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாளே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி கடுமையாக சாடியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்: உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த போரின் பின்னணியில் அதிர்ச்சியூட்டும் இழப்புகள்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள புதிய அமைதி ஒப்பந்தம் மற்றும் தற்காலிகப் போர் நிறுத்தம் ஒருவேளை நீடித்தால், உலக வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்த போர்களில் ஒன்றாக இது கருதப்படும்.
உலகப்போரை முடித்த வெர்சாய்ஸ் அரண்மனையில் அமெரிக்கா-ஈரான் போரும் முடிவுக்கு வந்த வரலாற்று தருணம்
பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வெர்சாய்ஸ் அரண்மனையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்கா - ஈரான் இடையே கையெழுத்தான 14 அம்ச அமைதி ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் இதோ!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் குறித்து எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் இணக்கப்பாட்டின் அசல் நகலை பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: 4 மாத போருக்கு அதிகாரப்பூர்வ முற்றுப்புள்ளி
சர்வதேச அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக, கடந்த நான்கு மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் (MoU) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளனர்.
'ஈரான் ஒழுங்கா நடக்காட்டி குண்டு போடுவோம்': ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன் டிரம்ப் மிரட்டல்
ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பிரான்சில் நடைபெறும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வழக்கமான பாணியில் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மார்ச் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக எண்ணெய் விலை 80 டாலருக்கும் கீழே சரிந்தது
எண்ணெய் விலைகள் தணியத் தொடங்கியுள்ளன; மார்ச் மாத தொடக்கத்திற்கு பிறகு முதல் முறையாக ஒரு பேரலுக்கு 80 டாலருக்கும் கீழே சரிந்துள்ளன.
ஈரானைத் தாக்க அமெரிக்காவிற்கு உதவிய எலான் மஸ்க்கின் க்ரோக் AI; எப்படி
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில், எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு (AI) கருவியான க்ரோக் பயன்படுத்தப்பட்டதை அமெரிக்க இராணுவம் உறுதி செய்துள்ளது.
3 நாட்களில் 3,000 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்; பின்னணியில் இருக்கும் உலகளாவிய ரகசியம்
உலகளாவிய புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள மிக முக்கிய திருப்புமுனையாக கருதப்படும் அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம், இந்தியப் பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'எங்களை அசிங்கப்படுத்துகிறார்கள்': FIFA அமைப்பிற்கு எதிராக ஈரான் கேப்டன், பயிற்சியாளர் குமுறல்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து 2026 தொடரின் தங்களின் முதலாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் 2-2 என டிரா செய்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க அதிகாரிகளால் ஈரான் அணியினர் உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஃபிஃபா உலகக் கோப்பை 2026: ஈரான், நியூசிலாந்தை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது
2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஈரான் தேசிய கால்பந்து அணி, நியூசிலாந்து அணியுடன் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
முடிவுக்கு வந்த போரிலும் மூண்ட புதிய சர்ச்சை:அமெரிக்கா - ஈரான் இடையே வெடித்த முரண்பாடுகள்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் தங்கள் 4 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து 60 நாட்கள் தற்காலிகப் போர்நிறுத்தத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளன.
ஈரானுக்கு பணம் தருகிறதா அமெரிக்கா? அது பொய்யென டொனால்ட் டிரம்ப் ட்வீட்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே 4 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்டப் போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பரவி வரும் சில நிதியுதவித் தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு: கப்பல்களுக்கு புதிய கட்டணம் விதிக்கும் ஈரான்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த போர், ஒருவழியாக எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்த உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
போரினால் பலியாகும் அப்பாவி இந்தியர்கள்: அமெரிக்கக் கடற்படை ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை 3 இந்திய மாலுமிகள் பலி
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியிருந்த கடந்த வாரத்தில், சர்வதேசக் கடல் வர்த்தகத்தின் மிக முக்கியப் பகுதியான ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் கடல் பகுதியில் பயணித்த வணிக கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய அடுத்தடுத்த ஏவுகணைத் தாக்குதல்களில் 3 இந்திய மாலுமிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.